நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.06.2024
கவி இலக்கம்-270
“வசந்தம்”
————
வசந்தத்தில் ஒர் நாள் வந்தாள்
வளமாக அழகாக வடிவானாள்
மனதிற்கு இனிமையாக சுவையானாள்
பாரெல்லாம் பரவி விடியல் தந்தாள்
தென்றலாய் மணம் வீசி மயங்க வைத்தாள்
மலர்களாக பூத்து குலுங்கி மணம் பரப்பினாள்
வண்டுகள் தேனீக்கள் பறக்க வைத்து காதல் செய்தாள்
மரம் செடி கொடிகள் பச்சை பசேலென காட்சி தந்தாள்
மக்களோடு இயற்கை உறவாடி மகிழ செய்தாள்
மானிட வாழ்க்கை வளமானதாக்க கைகோர்த்து வருடி நின்றாள்
ஒவ்வொரு குடும்பங்களை வனப்பாக்கி அள்ளி வீசி மகிழச் செய்தாள்
இறைவனோடு இயற்கையும் கலந்து வசந்தம் தந்து மகிழச் செய்தாள்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan