“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277
“வலி”
————
தாயெனும் அந்தஸ்தை அடைய
ஏழேழு ஜென்ம மறு பிறப்பு
இவ்வுலகில் எடுப்பதுபோல்
நூறு எலும்புகளை உடைத்த வேதனையில்
பிரசவ வலி
இறுதி யுத்தத்தின் போது
பாலியக் கொடுமையில் அகப்பட்டு
சித்திரவதையில்
துடிப்பில் கொடிய வலியில் இறந்த நிலை
காணாமற் போனோரின்
பெற்றோர்கள் தேடி அலைவில் வலியில் மரண நிலை
போர்ச் சமரில் காயப்பட்டு அபயவங்களை இழந்து காயங்களில் கொடிய வலியினால்
உயிர் போன நிலை
ஜெயா நடேசன
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan