மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-02,02.2023
கவி இலக்கம்-1934
சுதந்திரமாமே
———————
யாருக்கு சுதந்திரம்
எங்கே சுதந்திரமாமே
பல் வளங்களாலும் நிரம்பிய
எம் தாய்த் திருநாடே
தமிழருக்கென இல்லாத சுதந்திரம்
பொருளாதார வீழ்ச்சியிலே
தாயகமே பசி பட்டினி வறுமை கோட்டினில்
வாடி வதங்கி உயிரற்ற நிலையில்
75வது சுதந்திரத் தின விழா தேவையோ
பல கோடி பணம் செலவில் கொண்டாட்டமோ
ஊழல்கள் காரணமாக மீட்க முடியாத நிலையில்
மறுப்பு தெரிவித்து போராட்டங்கள் பல
சுதந்திரத்திற்காக போராடும்
இலட்சியவாதிகள் அழியலாம்
சுதந்திர வேட்கை எம் மக்களிடையே
அழியவே அழியாதே
தமிழ் மக்களின கனவு சுதந்திரமே
போராடிப் பெறுவதே
போராடி மரித்த மாவீரர்கள்
அடைய முடியாமற் போனதை
எம் சந்ததிகள் போராடி
பெறுவதை நாம் பார்த்திருப்போம்
சுதந்திரத்திற்காக உயிரை தியாகம்
அவர்களின் சுதந்திரப் பயிர்களின் விதைகளை
வருங்காலச் சந்ததிகள் முளைக்க வைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading