Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-31.01.2022
கவி இலக்கம்-1450
சுதந்திர ஏக்கம்
——————————-
சந்திரனும் நட்சத்திரங்களும்
இடையிடையே வந்து போவதும்
சூரியன் ஒளியின் பிரகாசம் கிடைத்தாலும்
இருளின் ஆதிக்கம்
இன்றைய நிலையில் இரவை கவ்விய படிதான்
அமைதிக் காற்றை சுவாசித்தும்
வருடங்கள் மூன்றை கடந்து விட்டன
அநிநாயமாய் அழிந்து போன உடலங்கள்
உலகளவில் உயிர்கள் பல்லாயிரம்
எமது சந்ததியினர் கூட
சுதந்திர வாழ்வினை காணவில்லை
இளையோரும் தொற்றால் பாதிப்பே
நாடுகளில் சுதந்திரமற்ற வாழ்க்கை
நேசிக்கும் களங்கமற்ற உள்ளங்கள்
பெருமூச்சுடன் கவலையில் முடங்கினரே
எப்போது வருமோ மக்களுக்கு ஒரு விடியல்
சுதந்திர வாழ்வின் ஏக்கம் எப்போது தீருமோ

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading