நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.02.2022
கவி இலக்கம்-161
சாந்தி
—————
சாந்தி என்ற பெயர் உண்டு
அம்மா அழைத்தால் அழகும் உண்டு
உதய சூரியன் ஒளிர்ந்து விட்டால்
மக்கள் மனது மகிழ்வதுண்டு
முகமும் மலர்ந்து அழகாகும்
வாழ்கையே சாந்தி பெறும்
கணவன் மனைவி பிணைப்பாகும்
குழந்தை ஒன்று கிடைத்து விட்டால்
குடும்பமே ஒரு பல்கலைக் கழகமாகும்
குடும்ப வாழ்விற்கு சாந்தியாகும்
மதமே மனதிற்கு வழிகாட்டியாகும்
கோவிலே பாவிகளுக்கு தஞ்ச இடமாகும்
இறைவனின் பக்தி வேண்டுதலினால
வாழ்க்கை சாந்தி சமாதானம் பெறும்
வாழ்ந்தவர் மண்ணில் புண்ணியம் சேர்ப்போர்
இறந்தவர் விண்ணில் சாந்தி நிலை அடைவர்

Nada Mohan
Author: Nada Mohan