16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
Jeya Nadesan
கவிதை நேரம்-18.08.2022
கவிதை இலக்கம்-1559
பிரிவாற்றாமை
—————————-
மனிதம் தொலைந்து சுயநலம்
தாண்டவமாடும் காலமிது
நாடு விட்டு நாம் வந்தாலும் எம்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும் எம்
இதயத்தில் என்றும் இருப்பது
எம் உடன் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போவது பரம்பரை எம் இனமே
தமிழனின் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு
நடு நிலமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் கேட்கும்
மனித ஏக்கங்கள் தொலைந்தோர் நினைவில்
எல்லாமே இழந்த வாழ்வாக பிரிவாற்றமையில்
நியாயம் கேட்டு நிற்கிறார்கள்
நம் பலம் நம் இனம் இன்னும் இன்னும் எழுவோம்
மனித உரிமைக்காய் குரல் கொடுப்போம்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...