Jeya Nadesan

கவிதை நேரம்-18.08.2022
கவிதை இலக்கம்-1559
பிரிவாற்றாமை
—————————-
மனிதம் தொலைந்து சுயநலம்
தாண்டவமாடும் காலமிது
நாடு விட்டு நாம் வந்தாலும் எம்
நாவு உச்சரிக்கும் நம் தேசம்
இடம் விட்டு இடம் பெயர்ந்தாலும் எம்
இதயத்தில் என்றும் இருப்பது
எம் உடன் உறவுகளே
ஆண்டாண்டு காலமாய்
மாண்டு போவது பரம்பரை எம் இனமே
தமிழனின் விடிவுக்கு
தலை நிமிர்வின் முடிவுக்கு
அடிமை வாழ்விற்கு
நடு நிலமை காணத்தான் ஆட்சிகள்
தேர்தல் வரும் ஆட்சி தேர்வும் நடக்கும்
கதிரைகள் மாறும் சண்டைகளும் வரும்
மாண்டு தொலைந்த உறவுகள் குரலும் கேட்கும்
மனித ஏக்கங்கள் தொலைந்தோர் நினைவில்
எல்லாமே இழந்த வாழ்வாக பிரிவாற்றமையில்
நியாயம் கேட்டு நிற்கிறார்கள்
நம் பலம் நம் இனம் இன்னும் இன்னும் எழுவோம்
மனித உரிமைக்காய் குரல் கொடுப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading