” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-27.04.2023
கவி-இலக்கம்-1679
வளர்ந்த குழந்தைகள் தாமே
—————————–
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று என்பர்
குழந்தை முதல் அழுகுரல்
கேட்கும் பெற்றோர் மகிழ்வர்
குடும்ப கவலைகள் ஏற்படின்
குழந்தை சிரிப்பே மருந்தாகும்
இன்றை குழந்தை வளர்ச்சியில்
தாமே யுக்தி கொண்டு வளர்கின்றனர்
பாமுகத்தில் அழகிய மலர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து உயர்கிறார்கள்
உற்சாகம் அமைதி விருப்பு மகிழ்வு
பல நிகழ்வுகள் மூலம் வளர்கின்றனர்
பெற்றோர் ஆதரவும் சிலருக்கு உண்டு
உற்சாகம் ஊட்டும் பாமுகமும் சிறப்பன்றோ
அன்று பெற்றோர் உதவிய பிள்ளைகள்
இன்று பிள்ளைகள் உதவி தேடி பெற்றோர்
தாமே தனித்து தேடல் மூலம் பெறுகின்றனர்
கைத்தொலை பேசி பக்க பலம் உதவுகிறது
எதனையும் ஆர்வத்துடன் தேடும் உற்சாகம்
குழந்தைகள் ஆராய்ச்சியில் வளர்கின்றனர்
தாமே தனித்திருந்து தேடி வளர்கிறார்கள்

Nada Mohan
Author: Nada Mohan