வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
Jeya Nadesan
கவிதை நேரம்-27.04.2023
கவி-இலக்கம்-1679
வளர்ந்த குழந்தைகள் தாமே
—————————–
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று என்பர்
குழந்தை முதல் அழுகுரல்
கேட்கும் பெற்றோர் மகிழ்வர்
குடும்ப கவலைகள் ஏற்படின்
குழந்தை சிரிப்பே மருந்தாகும்
இன்றை குழந்தை வளர்ச்சியில்
தாமே யுக்தி கொண்டு வளர்கின்றனர்
பாமுகத்தில் அழகிய மலர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து உயர்கிறார்கள்
உற்சாகம் அமைதி விருப்பு மகிழ்வு
பல நிகழ்வுகள் மூலம் வளர்கின்றனர்
பெற்றோர் ஆதரவும் சிலருக்கு உண்டு
உற்சாகம் ஊட்டும் பாமுகமும் சிறப்பன்றோ
அன்று பெற்றோர் உதவிய பிள்ளைகள்
இன்று பிள்ளைகள் உதவி தேடி பெற்றோர்
தாமே தனித்து தேடல் மூலம் பெறுகின்றனர்
கைத்தொலை பேசி பக்க பலம் உதவுகிறது
எதனையும் ஆர்வத்துடன் தேடும் உற்சாகம்
குழந்தைகள் ஆராய்ச்சியில் வளர்கின்றனர்
தாமே தனித்திருந்து தேடி வளர்கிறார்கள்
