” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-31.05.2023
கவி இலக்கம்-1698
அபகரிப்பில் காணிகள்
——————————-
என்றும் நாம் நேசிக்கும்
எம் தாயக மண்ணின் காணிகள்
அபகரிப்பில் இழந்து நிற்கும் மக்கள்
பல காலம் வாழ்ந்த வீட்டு உடமைகள்
பல கதைகள் கூறும் மரங்கள்
அபகரித்து மக்கள் நடுத்தெருவில்
கூடு இழந்த பறவைகளாய் அவதியில்
இந்து கோவில் கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில்
பல புத்த விகாரைகள் எழும்புகின்றன
வெள்ளை வெளீரென காட்சி பாதுகாப்பில்
நிலையிழந்து நிம்மதியிழந்து எதிர்ப்பு நிலையில்
அரச உதவியுடன் பெளத்த பிக்குகள் பற்றோர்
தாய்லாந்து பிக்குகள் பாத யாத்திரை கதிர்காமம் வரையில்
திருகோணமலையில் பெளத்த விகாரை
எம்மக்களின் போராட்டமும் எதிர்ப்பும்
மக்களையே அதிர வைக்கும் சம்பவங்களாக
பற்பல இடங்களில் அகழ் ஆய்வில் விகாரைகள்
பற்பல பிரச்சினைகள் மாறி மாறி சோதனைகள்
வலுவிழந்து நலமிழந்து பலமிழந்து எம் மக்கள்
காணிகள் அபகரிப்பில் அழுது புலம்புகின்றனரே

Nada Mohan
Author: Nada Mohan