கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-01.12.2022
கவிதை இலக்கம்-1606
வழியைத் தேடுவோம்
—————————-
இருண்ட பாதையில் இன்று நாம்
அற்புத வாழ்க்கை அலங்கோலமானதே
இயல்பு வாழ்க்கை தொலைந்து போகுதே
மின்சாரக் கட்டணம் உயர்வும் கட்டுப்பாடனாதே
சிக்கனமாக தண்ணீர் பாவிக்க வைக்கவே
பாத்திரம் கழுவ குளிக்கவோ யோசிக்க நேருதே
பொருட்கள் விலையேற்றம் பொருளதார பிரச்சினையே
பசி பட்டியினில் மக்களின் கொடுமையே
இரவு பகலாக குளிரில் வேலையுமே
பணம் பற்றாக்குறை கனவை புதைக்கிறதே
ஆழ்ந்த அமைதியில் இரவில் தூக்கமில்லையே
மகத்தான மாதமாய் மார்கழி பிறக்கையிலே
நல்லதாக யாவும் பெற்று வாழ இறைவன் துதியே
நல்வாழ்வு கிடைக்க நாம் வழி தேடி சிறப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading