பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-20.07.2023
கவி இலக்கம்-1726
விடுமுறை வந்தாலே
————————–
விடுமுறை வந்தாலே
மகிழ்வில் மனதிலே பெரும் வியப்பு
வருடந்தோறும் வந்து போகும் விடுமுறை
காலத்தை பொறுத்து வித்தியாச விடுமுறை
தாயக மண்ணில் விடுமுறை கழிப்பது அற்புதம்
உள்ளமதில் உவகை பொங்கும்
கண்ணில் தோன்றும் காட்சிகள்
கணப் பொழுதில் வந்து வந்து போகும்
எம் சொந்த உறவுகளை சந்திப்பதில்
விரும்பிய உணவு உண்டு மகிழ வைக்கும்
சுட்டெரிக்கும் வெப்ப தாங்க ஆற்ற
நீர் பாயும் இடங்கள் செல்ல நேரிடும்
கோலங்கள் மாறும் கொள்கைகள் தணியும்
காட்சிகள் பார்த்து கனிவாய் மலரும்
ஆடைகளும் குறைவில் அரைக் கோலமாகும்
நீர் ஓட்டங்களில் மக்கள் அலை மோதும்
அலை மோதிட ஆலயங்களில் மக்கள் கூடும்
உறவுகள் குடும்ப சந்திப்பில் மகிழும்
கலை விழாக்களும் கலாச்சாரம் வளரும்
அகிலமெலாம் விடுமுறை ஆனந்தமாகும்
காரியங்களும் பல்கிப் பெருகும்
இளையோர் உன்னத விடுமுறையாக கழிப்பர்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading