” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-25.01.2024
கவி இலக்கம்–1807
கொடிய அரக்கனே ஓடி விடு
———————————-
போதை வஸ்து எனும் கொடிய அரக்கனே
நீ ஏன் இவ்வுலகிற்கு வந்தாய்
மானிடர் உனக்கு செய்த பிழை என்ன
இளையோரை அடிமையாக்கி கொல்ல வைக்கிறாய்
நீ இவ்வுலகில் பழி வாங்கத் துடிக்கிறாய்
என இனம் அழியக் காரணம்தான் என்னே
உனக்கு அடிமையாகி இளையோர் பலர்்
பல்கலைக்கழக மாணவர் பாடசாலை உட்பட
வாழ்வை தொலைத்து விட்டு அலைகின்றனரே
உடல் உளம் நலமிழந்து இறப்பை ஏற்கின்றனரே
பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக்கினாயே
இளம் சமுதாய வாழ்வு சீரழிந்து போகின்றதே
போதை வஸ்தே நீ ஏன் இவ்வுலகிற்கு வந்தாய்
இளையோரை அழித்து வேடிக்கை பார்க்கிறாய்
இதற்கு காரணம் யாரென்பது கேள்விக் குறியே
மனிதம் இம்மண்ணில் மலராதா விடிவு கிடைக்காதா
இருண்டு போனது எம் நாடு மட்டுமல்ல
எம் இன மக்களின் உள்ளங்களும்தான்
கொடிய அரக்கனே இவ்வுலகை விட்டு ஓடி விடு
எம் மக்களை நிம்மதியாக வாழ விடு

Nada Mohan
Author: Nada Mohan