10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும் சந்திப்பு
“ நிட்சயதார்த்தம்”
பிள்ளைவரம் என்பது பேற்றின் வரமாகும்
அள்ளி அணைத்து அமுதூட்டி அரவணைத்து
பள்ளிக்கு அனுப்பிப் பட்டம் பெறவைத்து
உள்ளக் குதூகலம் உணர்வினில் பொங்க
இருவீட்டார் ஒன்றிணைந்தும் இனித்திடக் கூடிமகிழ்ந்து
திருமண பந்தத்தை தித்திப்பாய் நிகழ்த்த
திருநாள் குறித்து பழத்தட்டு மாறி
இருவீட்டார் நிச்சயதார்த் த்த்தை நிகழ்த்துவர்…
கோசலா ஞானம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.