Selvi Nithianandan அன்னைக்குநிகருண்டோ அவனியிலே ( 614)

, 09-05-2024 Selvi Nithianandan : அன்னைக்குநிகருண்டோ அவனியிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்அயரா வலிகளை
சுமந்து
நேரமும் எமக்காய்
அர்ப்பணித்து
நேர்த்தியும் பலசெய்து
நெஞ்சினில் தாங்கியவர்

பசிதனை மறந்து
பணிவிடை செய்து
ருசிதனை துறந்து
உணவினை உண்டு
தன்னிலை மறந்து
தம்மகவுகள் கண்டு
தரணியில் உயரவே
தாங்கிய தூணானார்

: கருவறை சுமந்தவர்
கல்லறை ஆனார்
ஆண்டுகள் ஜந்தும்
அடங்கிடா வலியும்
மாண்டவர் மீண்டும்
வருவார் என்னும்
நினைவுகள் மறவாது
நித்திலம் வாழ்தல்நன்றே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading