Selvi Nithianandan

மாசி வந்தாலே ( 601)
மாசியிலே மகத்தான பிறப்பு
மனையிலே பெற்றோராய் சிறப்பு
மகிழ்ச்சியே இல்லற இணைவு
மண்ணிலே வந்ததே பிரிவு

பாசத்தால் இருவரின் அன்பு
வேசத்தால் நடிக்காத பண்பு
பாதியிலே பிரிந்திட்ட தந்தை
பக்குவமாய் காத்திட்ட விந்தை

ஆண்டுடன் மாதமும் ஒன்றாய்
மாண்டதே நாற்பத்து ஒன்பதாய்
தாண்டுதே நூறாவது அகவையாய்
வலிக்குதே இன்றும் சுமையாய்

அன்னையும் அவதரித்த நாளாய்
அகவையும் தொன்னூற்று ஆறாய்
அடுத்தடுத்து வருகுதே ஒன்றாய்
அகமும் துடிக்குதே நெருப்பாய்

மாசியிலே மகத்தான பிறப்பு
மனையிலே பெற்றோராய் சிறப்பு
மகிழ்ச்சியே இல்லற இணைவு
மண்ணிலே வந்ததே பிரிவு

பாசத்தால் இருவரின் அன்பு
வேசத்தால் நடிக்காத பண்பு
பாதியிலே பிரிந்திட்ட தந்தை
பக்குவமாய் காத்திட்ட விந்தை

ஆண்டுடன் மாதமும் ஒன்றாய்
மாண்டதே நாற்பத்து ஒன்பதாய்
தாண்டுதே நூறாவது அகவையாய்
வலிக்குதே இன்றும் சுமையாய்

அன்னையும் அவதரித்த நாளாய்
அகவையும் தொன்னூற்று ஆறாய்
அடுத்தடுத்து வருகுதே ஒன்றாய்
அகமும் துடிக்குதே நெருப்பாய்
ஐயா 24.02.1924 (100-49)
அம்மா 28.02.1928 (96-5)

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading