” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

மாசி வந்தாலே ( 601)
மாசியிலே மகத்தான பிறப்பு
மனையிலே பெற்றோராய் சிறப்பு
மகிழ்ச்சியே இல்லற இணைவு
மண்ணிலே வந்ததே பிரிவு

பாசத்தால் இருவரின் அன்பு
வேசத்தால் நடிக்காத பண்பு
பாதியிலே பிரிந்திட்ட தந்தை
பக்குவமாய் காத்திட்ட விந்தை

ஆண்டுடன் மாதமும் ஒன்றாய்
மாண்டதே நாற்பத்து ஒன்பதாய்
தாண்டுதே நூறாவது அகவையாய்
வலிக்குதே இன்றும் சுமையாய்

அன்னையும் அவதரித்த நாளாய்
அகவையும் தொன்னூற்று ஆறாய்
அடுத்தடுத்து வருகுதே ஒன்றாய்
அகமும் துடிக்குதே நெருப்பாய்

மாசியிலே மகத்தான பிறப்பு
மனையிலே பெற்றோராய் சிறப்பு
மகிழ்ச்சியே இல்லற இணைவு
மண்ணிலே வந்ததே பிரிவு

பாசத்தால் இருவரின் அன்பு
வேசத்தால் நடிக்காத பண்பு
பாதியிலே பிரிந்திட்ட தந்தை
பக்குவமாய் காத்திட்ட விந்தை

ஆண்டுடன் மாதமும் ஒன்றாய்
மாண்டதே நாற்பத்து ஒன்பதாய்
தாண்டுதே நூறாவது அகவையாய்
வலிக்குதே இன்றும் சுமையாய்

அன்னையும் அவதரித்த நாளாய்
அகவையும் தொன்னூற்று ஆறாய்
அடுத்தடுத்து வருகுதே ஒன்றாய்
அகமும் துடிக்குதே நெருப்பாய்
ஐயா 24.02.1924 (100-49)
அம்மா 28.02.1928 (96-5)

Nada Mohan
Author: Nada Mohan