நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Selvi Nithianandan

அத்திவாரம்

அத்திவாரம்பலமானால்
ஆயூளும் மகிழ்வாகும்
ஆனந்த வாழ்வானால்
அகிலமே சிறப்பாகும்

அன்னன தந்தை
அற்புத வரமாகும்
அள்ளவும் வற்றாத
அமுத சுரபியாகும்

இல்லமே அடிக்கல்லின்
அத்திவார முதலாகும்
இணைவே வாழ்வின்
ஆரம்ப படியாகும்

இறுகிய வாழ்வும்
இளகிய மனமும்
இன்பமாய் வாழ்ந்திட
இனித்திடும் அடிக்கலே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan