Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553
ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய்
ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய்
அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய்
அனைத்து உயிர்களுக்கும் தேவையாய்

நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய்
நதிகள் ஆறுகள் அருவிகள் சமுத்திரமாய்
கடல்கள் குளங்கள் ஓடைகள் ஏரிகளாய்
கால்வாய் குட்டை நன்னீர் கிணற்றடி நீரானாய்

ஐம்பூதங்களில் ஒன்றாய் பயிர்களுக்கு உயிரானாய்
நிறம் மற்றதாய் சுவையில் மாறுபாடாய்
வெந்நீராய் குளிராய் பானமாய் விற்பனையாய்
தேவைக்கேற்ப நீரைஅருந்தி ஆரோக்கியம் பேணலாமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading