” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553
ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய்
ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய்
அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய்
அனைத்து உயிர்களுக்கும் தேவையாய்

நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய்
நதிகள் ஆறுகள் அருவிகள் சமுத்திரமாய்
கடல்கள் குளங்கள் ஓடைகள் ஏரிகளாய்
கால்வாய் குட்டை நன்னீர் கிணற்றடி நீரானாய்

ஐம்பூதங்களில் ஒன்றாய் பயிர்களுக்கு உயிரானாய்
நிறம் மற்றதாய் சுவையில் மாறுபாடாய்
வெந்நீராய் குளிராய் பானமாய் விற்பனையாய்
தேவைக்கேற்ப நீரைஅருந்தி ஆரோக்கியம் பேணலாமே

Nada Mohan
Author: Nada Mohan