கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Selvi Nithianandan

தீயில் எரியும் எம் தீவு

நாட்டு நிலைமை என்னாச்சு
சாட்டு இப்போ குழப்பியாச்சு
நாலா பக்கம் சிதறியாச்சு
நரிகள் இப்போ மாறியாச்சு

குடும்ப ஆட்சியில் சூடுபிடிப்பு
குடிமக்களும் குழப்பத்தில் பதகளிப்பு
சட்ட ஒழுங்கு தவிடுபொடியாச்சு
சடுதியாய் எல்லமே மாறியாச்சு

ஆட்சியாளரின் வீடுகளும் எரிப்பு
அவசரகாலச் சட்டமும் நடிப்பு
ஆட்சிப் பிடியில் அனல்வெறியாட்டம்
ஆவணங்களை எரித்து கொலையாட்டம்

பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்
பணத்தை திரட்டி பக்கவாய் ஒழிப்பு
பதின்மூன்று ஆண்டின் முள்ளிவாய்கால் இழப்பு
பஷ்மமாய் இப்போ எரியுது நாடே

Nada Mohan
Author: Nada Mohan