” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

தொலைந்ததா அல்ல தொலைத்ததா 523

நாட்டை பிடிச்ச சனியனும்
நாலு திசையாய் பறக்குது
நன்றி கெட்ட நாட்டாமை
நல்லாய் வாலை ஆட்டுது

இரவோடு இரவாய் திட்டம்
இணைவாேடு துணையும் ஓட்டம்
இல்லத்தில் சொகுசு ஆட்டம்
இப்போ இருதலைகொள்ளி நாட்டம்

பாதுகாப்பு இல்லம் படையெடுப்பு
பதுங்குகுழி இரகசியஅறை கண்டுபிடிப்பு
பதுக்கிய பணம் ரொக்கமாய் எடுப்பு
பதவி முடியுமுன் மக்களால் எச்சரிப்பு

அண்டை நாடுகளுக்குள் தஞ்சம்
அவதியாய் தீர்த்ததே வஞ்சம்
மண்டை பலருக்கு போராட்டம்
மண்ணிலே என்றும் திண்டாட்டமே.

Nada Mohan
Author: Nada Mohan