கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

விடிவு
நாளை என்பது விடிவே
நாளும் நடக்கும் முடிவே
நாட்டு நிலைமை எதுவோ
நல்ல செய்தி வருமோ

அச்சம் கொண்ட வாழ்வு
ஆகாரம் இல்லா சோர்வு
அறிய முடியாத் தெளிவு
அதுவே இப்போ உணர்வு

வீட்டுக்குள்ளே முடங்கிய சரிதம்
வீதிக்கு வரவே இப்போ துரிதம்
வீணாய் தானே இறக்கும் வீதம்
வீராப்பாய் மறைக்கும் பெருமிதம்

நாளை என்பது யாரதுகையில்
வேளை முடிந்தால் போகணும் பிடியில்
காலை மாலை வந்திடும் நிலையில்
தோழமை போல காத்திடு உலகில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading