பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

மனங்கள் (562)

போட்டியாக பலரது குணங்கள்
ஈட்டியாக குத்தும் ரணங்கள்
பொறுக்க முடியா வார்த்தைகள்
பொறுமை குலையச் செய்யும்

சொந்தம் பந்தம் கூட
சொல்லில் விசம் துள்ளும்
சொட்டு சொட்டாய் சொரிய
சொக்கித் தானே நானும்

பணம் என்னும் தேட்டம்
பந்தா காட்டி நாட்டம்
குணம் மாறி ஓட்டம்
குள்ள நரியாய் ஆட்டம்

புலத்து வாழ்வில் புகழ்ச்சி
புலம்பி புலம்பி தேர்ச்சி
புழுங்கி புழுவாய் முயற்சி
புதுமை படைக்கும் மனிதம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading