” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

மனங்கள் (562)

போட்டியாக பலரது குணங்கள்
ஈட்டியாக குத்தும் ரணங்கள்
பொறுக்க முடியா வார்த்தைகள்
பொறுமை குலையச் செய்யும்

சொந்தம் பந்தம் கூட
சொல்லில் விசம் துள்ளும்
சொட்டு சொட்டாய் சொரிய
சொக்கித் தானே நானும்

பணம் என்னும் தேட்டம்
பந்தா காட்டி நாட்டம்
குணம் மாறி ஓட்டம்
குள்ள நரியாய் ஆட்டம்

புலத்து வாழ்வில் புகழ்ச்சி
புலம்பி புலம்பி தேர்ச்சி
புழுங்கி புழுவாய் முயற்சி
புதுமை படைக்கும் மனிதம்

Nada Mohan
Author: Nada Mohan