நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Vajeetha Mohamed

முள்ளிவாய்க்கால்

மீளமுடியாத பதிவு
மீண்டு எழும் நினைவு

ஓய்வில்லா ஒப்பாரி
ஒடுக்குமுறையின் சரமாரி

சொந்தமண்ணின் செல்வங்கள்
செத்துமடிந்த அவலங்கள்

அகலத்திறந்த ஆதிக்கம்
அடிமையாக்கிய ஆணவம்

அடக்குமுறையின் அதிகாரம்
அகத்தைகொண்ட தலைக்கணம்

பிணக்குவியலுக்குள் பெ௫மை
கொண்டியது
பிஞ்சுகளின் கு௫தியில்
மகிழ்ச்சி தாண்டவமாடியது

எம் இனத்தையே அழித்தவலி
சிதைத்த வலிப்புண்களின் வேலி

காயத்தின் தழும்பும் மறைவதில்லை
காலத்தின் நிகழ்வும் நிலைப்பதில்லை

விதியென விரண்டோடி வீழாமல்
மதியுண்டு வீறுகொண்டு துடித்தெழுவோம்

துயர்துடைத்து புதிப்பித்து
முள்ளிவாய்க்கால் முதுகெலும்பாய்

சரித்த எம் இனமே
சரித்திரம் படைத்திடு

நாளை எம்பரம்பரை
நெஞ்சுயர்த்தி நிமர்ந்து
ஈழமதில் வாழவேண்டாமா

நாம் ஏன் ஓடி ஒழியவேண்டும்
எம் மூத்தபெற்றோரின் ௨ழைப்பு
ஈழம்

குடியேறிய கூட்டம் எம்மை வீழ்ந்த
கூடியே நாம் வாழாமையே வீழ்ச்சியின்
சூழ்ச்சி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan