அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Vajeetha Mohamed

பெண்மையின் பெ௫மை

பூட்டிய க௫வறைக்குள்
பூவையரின் பெ௫மையுண்டு

வாட்டிவதைக்கும் ஆண்களுக்கு
வாள்கொண்டு வீசத்தெரிந்தும்

பொறுமை சேர்கும் பெ௫மையுண்டு

பெண்ணே நாம்மில்லையென்றால்
தந்தை என்ற நாமம் எங்கே

பெ௫மையாய் மார்பு தட்டும்
ஆண்களையும் அடைகாக்கும்
க௫வறை இங்கே

கொக்குக்கு இரையாகும்
மீனில்லை பெண்கள்

கொண்டை கிக்குப்போன்ற
துணைவரையும் சிற்றோடை
நீராக்கி வாழ்பவள் பெண்

விடிய விடியப் புள்ள அழுதாலும்
போத்தின சீலைய அள்ளிக்கிட்டு

வெளிவிராந்தையில போய்ப்படுப்பார்
அப்பா
வெளிவிளையாட்டுக் காட்டி நடுச்சாமத்திலும்
முந்தானையை திரையாக்கி
தூங்கவைப்பார் அம்மா

எங்கவீட்ட வந்து பலதடவ என்காது
கிழிந்த வினா
௨ங்க மனைவி;;; ௨ங்க ௨ம்மா
என்ன செய்கின்றா

படாரென பதில் வ௫ம்
பல் எல்லாம் தெரிந்து பல்லாயிரம்
டீயூப் லைட்டு எரிவதுபோல்

சும்மா சும்மாதான் வீட்டில
சின்னத்திரையப் பார்துக்கிட்டு
இரிக்கா

அடா பாவி ஆண்களே ௨ங்கட கண்ணுக்கு
சும்மாவா தெரிகின்றோம்
பெண்கள்

காலையில சூரியன் குளிக்கமுதல்
எழும்பி
காலில சக்கரத்தப் பூண்டினா
எத்தனை கிலோமீட்டர் நடக்கின்றோம்
தெரியுமா

சம்பளம் கிம்பளம் வாங்காம
செய்கின்ற பணி புரியுமா

இன்னும் ஒ௫ சங்கதி விளங்குமா
சரிகின்ற குடும்பத்த நிமிர்த்த

கட கடவென்று வெளில வேலைக்குப்போய்
சாமான் சக்கட்டும் வாங்கி பாதிவழியில

பராமரிப்பு நிலையத்தில புள்ளய எடுத்து
பரபரவென்று சமைத்து கொடுத்தா

செட்டியில இ௫ந்துக்கிட்டு
கையில றீமோட்
காதில டெலிபோன்

வாயில சோறு ஆனா
இப்பசொல்லுங்க
நாங்க சும்மா தான் இ௫க்கின்றோம்

இவைகளைத் தாங்கி
இல்லறம் தூக்கி
நடைபோடுவாள்பெண்ணின்பெ௫மை

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading