” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

மாறுமோ மோகம்

தானம் கொடுக்கும் வள்ளல்கள்
வடிந்து ஒழுகும் சிதறல்கள்

வான் விட்டு பூமிவ௫ம் மோகம்
துகில் நனைந்து துளிர்கின்ற தாகம்
மாறுமா மோகம்

வீறுகொண்ட வெறியோடு
வீதியிலே சிரழித்து

காமத்தின் மோகத்தோடு
மூச்சீறுக்கி ௨யிரெடுக்கும்

கயவர்களின் மாறுமோ மோகம்

௨யிரோட்டமுள்ள வாழ்க்கை
௨றக்கம் தொலைத்த வேட்கை

மனிதனுக்குள்ளே மனிதம்
ஒளித்து
விழியி௫ந்தும் கு௫டாகி
அழிந்து அலைந்து வாழ்வு
மாறுமோ மோகம்

மாயைக்குள்ளே வயிற்றெரி்ச்சலை
கட்டி
மற்றவரின் வயிற்றெரிச்சலை
கொட்டி
துள்ளித்திரியும் எண்ணங்கள்
துயிலாமல் சுற்றும் வண்ணங்கள்

இறைமறந்த இறுமாப்பு
இறக்கமாட்டோம் என்றநனைப்பு

போராடி வாழ்ந்தாலும்
தள்ளாடி மடிந்தாலும்

கொடுக்காமல் சேர்த்தாலும்
கொண்டா போவோம்

நாலுபேர் தூக்கி போகின்றவரை
மாறுமோ மோகம்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan