Vajeetha Mohamed

மாறுமோ மோகம்

தானம் கொடுக்கும் வள்ளல்கள்
வடிந்து ஒழுகும் சிதறல்கள்

வான் விட்டு பூமிவ௫ம் மோகம்
துகில் நனைந்து துளிர்கின்ற தாகம்
மாறுமா மோகம்

வீறுகொண்ட வெறியோடு
வீதியிலே சிரழித்து

காமத்தின் மோகத்தோடு
மூச்சீறுக்கி ௨யிரெடுக்கும்

கயவர்களின் மாறுமோ மோகம்

௨யிரோட்டமுள்ள வாழ்க்கை
௨றக்கம் தொலைத்த வேட்கை

மனிதனுக்குள்ளே மனிதம்
ஒளித்து
விழியி௫ந்தும் கு௫டாகி
அழிந்து அலைந்து வாழ்வு
மாறுமோ மோகம்

மாயைக்குள்ளே வயிற்றெரி்ச்சலை
கட்டி
மற்றவரின் வயிற்றெரிச்சலை
கொட்டி
துள்ளித்திரியும் எண்ணங்கள்
துயிலாமல் சுற்றும் வண்ணங்கள்

இறைமறந்த இறுமாப்பு
இறக்கமாட்டோம் என்றநனைப்பு

போராடி வாழ்ந்தாலும்
தள்ளாடி மடிந்தாலும்

கொடுக்காமல் சேர்த்தாலும்
கொண்டா போவோம்

நாலுபேர் தூக்கி போகின்றவரை
மாறுமோ மோகம்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading