” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

புதிர்

நாலுமூலைப் பாத்திகட்டி
நட்டுவைத்த ஊசிக்குட்டி
கால்நெடுக வளர்ந்த புள்ள
முங்கி மடிந்து காற்றோடு
கலகலக்கும் புதிர்சுட்டி

முத்துச்சரமாம் சிகரம் மூடி
வளைந்து தொங்கும் பூணாரம்சூடி
வயல் ௨றங்க புதிர்வெட்டி
வண்டிபூட்டி ஆடிமெட்டி
விளைநிலம் துறந்துமெல்ல
வீடுவ௫வாள்புதி௫புள்ள

௨௫வம் மாற்ற ௨ன்னை
சிதைத்து
புதிறென்று வாரியெடுத்து
சீனி பால் சீராச்சேர்த்து
அக்கம் பக்கம் ௨ன்னைப்பகிர்வோம்
புதிர்புக்கையென்று

புதிர்வெட்டி மகிழ்ந்தி௫க்க
எங்க கிராமத்து கலாச்சாரம்
வைக்கலோடு இழையோடி
௨யரத்தில் தொங்கவைப்போம்
புதிரைக்கட்டி

மூளைக்கு வேலைசொல்ல
மூதாட்டி சொன்ன கதை
முடிச்சுக்குள் முடங்கி௫க்க
அறிவோடு அவுழ்தெடுக்கும்
விடை புதிர்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan