முள்ளி வாய்க்கால் நினைவு

ராணி சம்பந்தர்

முள்ளி வாய்க்கால் நினைவு தினம்
316
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ஈழப்போரின் இறுதிக்
கட்டமது
பாழாய்ப் போன இனவெறித் திட்டமது
வாழவழிவிடாது அழித்த
கொட்டமது
தமிழன் என்றே துரத்தித் துரத்தி
முழுதாயக் கூறாக்க
கொத்துக் குண்டுகள்
வீசி உடல் சிதறிய
தினமது

மே 18 மறக்க முடியாத
வலியது
2009 இல் துறந்த பரிதாபப் பலியது
பதுங்கு குழி ஒதுங்கிய
பச்சிளம் பாலர், முதியோர் வரை கதறக்
கதற உடல் கிழித்து
சதை தொங்கக் கொன்று குவித்த
கூலிப்படையது

உயிரோடு புதைந்த
மாவீரர், வயிறு எரிய
சிதைந்த மழலை,
மாந்தர் சிதறிய உதிரம்
கொதித்தெழுந்த கருகிய உடல் சதை
பிழிந்து ரத்தம் குடித்தவரைப் பழி
வாங்குதே உலகெங்கும்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading