வசந்தா ஜெகதீசன்

எழிலே உலகே...

உருளும் உலகே..
வளர்ச்சியின் பாதை வரலாறு
வகை வகை மாற்றத்தில் பல ஏடு
வரம்பென அணையிடும்
தொழில்நுட்பம்
வற்றாத சுரங்கத்தின் புது நுட்பம்

எத்தனை அருவிகள் இணைந்தோடும்
இணையத்தின் சமுத்திரம் சான்றாகும்
இனிவரும் காலத்தின் இணைவிற்குள்
மனிதத்தின் செயல்நிலை குறைவாகும்
இயக்கமே இயந்திரமயமாகும்
வியக்கும் புரட்சியின் எழில் உலகே
விந்தை நிறைந்தெழும் உன் மகிழ்வில்
மொழிவளப் புரட்சியும் பேரழகே
முழுமை உலகையும்
ஒர்குடைக்குள்
நிலைத்துயர் பேறே பெரும் வளமே.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading