” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-290 .
கவித்தலைப்பு…..!

இதயம்
…………
ஓயாது உழைக்கும் தானியங்கி – வாழ்வில்
எதையும் தாங்கும்இடிதாங்கி!
இரத்தத் சுத்திபம்பு – இது
நின்றுவிட்டால் உயிருக்கே வம்பு!

வலது வென்றிக்கல் இடது வென்றிக்கல்
இதயம் – அதுபோல்
வடக்கு கிழக்கு மாகாணமே ஈழம்!
எங்களைப் பொறுத்து
ஈழமும் இதயமும்
ஒன்று – அட
இல்லை என்றால் அவன் சுத்த மண்டு!

உடலில் இதயப் புரட்சியின் இரத்த
ஓட்டம் – இவ்வாரே
எங்கள் விடுதலைக் காகவே சீமானின்போராட்டம்!
இதயம் இதுவே காதல் அடையாளச்
சின்னம் – நம்
இதயத்தில் தோன்றும்ஆயிர மாயிரம்எண்ணம்!

உண்மை அன்புக்கே இதயக் கதவு
திறக்கும் – பொய்
வேட தாரிகளைக் கண்டதும் திறக்க மறுக்கும்!
பெற்ற பிள்ளையைக்காக்கத் தன்னையே
கொடுக்கும் – இதயம்
துடிக்கும் வரைக்கும்உடலில் உயிரானதுஇருக்கும்!

பரந்த இதயமே உலக உயிர்களை
நேசிக்கும் – தூய
இதயமே இறைவனை சுவாசிக்கும்!
எங்கோ துடிக்கும் எங்கள் தலைவனின்
இதயம் – உறுதியாய்
மீண்டும் பிறக்கும் எங்கள் ஈழமண்ணில் உதயம்!

.ஆசிரியை ;
அபிராமி கவிதாசன்.
17.12.2024

Nada Mohan
Author: Nada Mohan