மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கஞ்சா

கெங்கா. ஸ்ரான்லி

கஞ்சி குடித்தவர்கள் இன்று
கஞ்சா அடிக்கின்றார்கள்
கெஞ்சி நின்றவர் இன்று
மிஞ்சி நிற்கின்றார்கள்
இது விதியா அல்லது சதியா
கஞ்சா என்றால் பகு சொல்லா பகாச் சொல்லா
கஞ்சா அடிப்பவரோ பகாசொல்லாவார்
அதனிடம் இருந்து இவரைப் பிரிக்க முடியாது
இளையோரை திசை திருப்ப எடுத்த முயற்சி இது
இதனால் இளம் சமுதாயமே கெடுகின்றது
அவரகளை இந்நிலைக்கு ஆளாக்குவதும்
வெளிநாட்டுப் பணமே
ருசி கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது
கஞ்சா ருசி கண்டவரோ அதைவிட மாட்டார்கள்
இங்கும் போதை மருந்து
வெளியிலும் வாங்கலாமாம்
இதெல்லாம் எங்கு போய் முடியுமோ
கஞ்சா புகை பிடிப்போர் மயக்கத்தில்
மயக்கத்தில் விளையும் தீமைகள்
கற்பளிப்பு கொலை கொள்ளை
நல்ல குடும்பத்து பிள்ளைகளும்
கஞ்சாவினால் நடுத்தெருவில்
பெரிய புள்ளிகளின் பிள்ளைகளும்
அதற்கு அடிமை யாகின்றனர்
கஞ்சாவை ஒளிக்க மக்கள்
விழிப்பணர்வு கொள்ள வேண்டும்
நிறுத்த முடியாவிட்டாலும்
குறைத்துக் கொள்ளலாம்
பிள்ளைகளின் இச்செயலால்
பெற்றார் ஏக்கத்தில்
மக்களே விழித்தெழுங்கள்
சுபீட்சத்தை தேடுங்கள்!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading