21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கீத்தா பரமானந்தன்
பிரிவுத்துயர்
கோசையா ஆசிரியரே!
பிரிவின் வலி
பிரியாத ரணத்தை
பதிவாக்கி ஆற்றுகின்றோம்!
மலர்ந்த புன்னகை
மனம்நிறை தைரியம்
கனத்த ஆழுமை
கணீர்க் குரலொலி
கலைந்து மறைந்து
கனவாய்ப் போனதேனோ?
பெண்ணியம் பேசிய
பெருமைகொள் படைப்பாளி
திண்ணிய நெஞ்சினைத்
தினவெடுத்த நோயாகி
திசைமாற்றியது கொடுமை!
அன்றிலின் நினைவு
அலைக்கழித்தத்தால்
அவதியாய்ப் போனீர்களோ ?
நெஞ்சு கனக்கிறதே
நேசப் பூக்கள். தவிக்கிறதே!
ஆசிரியமே ஆராதனையாய்
அனுதினம் ஓடியே
ஆக்கிய இளவல்கள்
அழுது துடித்தாலும்
ஆளத்தடம் பதித்து
முரசறைவர் உம்நாமம்!
விதைத்திட்ட இலக்கியங்கள்
விழுதாகிப் பெயர்பொறிக்கும்
இணையோடு ஒன்றித்து
இவ்வுலகைப் பார்த்திருப்பீர்!
கீத்தா பரமானந்தன்27-06 2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...