மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பட்டினி

பசித்திடும் போதே
புசிக்க வேண்டும்.
பாமர மக்களின்
உணர்ச்சியை மதிக்கவேண்டும்.

பட்டினி ஏழைகளுக்கே சொந்தம்.
பாசம் ஏழைகளின் பந்தம்
இரக்கம் இவர் வாழ்வின் சுகந்தம்
ஏங்கிடும் அன்பிற்கான வசந்தம்.

பசிக்காக மாத்திரை உண்ணும்
பணக்காரன்.
பசிவராது இருக்க நித்திரை கொள்ளும்
ஏழைகள்.

பட்டினி இருந்தவனுக்குத்தான்
தெரியும் பசியின் கொடுமை.
பொன்மனச்செம்மல் பட்டினியை உணர்ந்தவர்
அந்த அனுபவமே நாள் தோரும் உணவு
கொடுக்க வைத்த தாம்.

பட்டினியால் பிள்ளைகள்
படிக்கவில்லை எனச்
சத்துணவு பாடசாலையில்
கொடுத்தது மனிதம்.

நாமோ இங்கே உணவை
வீணாக்குகின்றோம்
இன்று தாயகத்தில் பஞ்சம்
நாளை இங்கும் பஞ்சம் வரலாம்.

வந்தால் பட்டினியால்
மக்கள் மடியலாம்
பட்டினி வராமல் தடுக்க
முயல்வோம் மக்களைக்
காப்பாற்றுவோம்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading