பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே..,,,

ரஜனி அன்ரன்

“ சாளரத்தின் ஒளியினிலே……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.09.2024

சாளரம் ஒரு சாமரம்
சாகசம் காட்டிடும் அதிசயம்
கதை சொல்லும் புத்தகம்
கலைக்கூடம் சாளரம்
கண்களுக்கு நல்விருந்து
காட்சிகளின் ஓவியம் சாளரம் !

சாளரத்தைத் திறந்ததும்
ஒளி வந்து தொட்டுச் செல்ல
தென்றல் காற்றும் தழுவிட
தெம்மாங்குப் பாட்டிசையும் கேட்டிட
புத்துணர்வாகுமே உள்ளமும்
புதிய நம்பிக்கையும் பிறக்குமே !

பரந்து விரிந்து கிடக்கும் பூமியை
பரவசமாய் பார்த்து ரசிக்க
பசும் சோலைகளைக் கண்டு களித்திட
பட்சிகளின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ
திறந்திடுமே சாளரமும் ஒளியோடு !

சாளரத்தின் ஒளியினிலே
மழைத்துளிகள் ஓவியமாக
நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணைச் சிமிட்டிட
கண்களும் குளிர சாளரமும் சாமரம் வீசிட
வாழ்வின் அழகான பரிசு சாளரமே !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading