பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே..,,,

ரஜனி அன்ரன்

“ சாளரத்தின் ஒளியினிலே……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.09.2024

சாளரம் ஒரு சாமரம்
சாகசம் காட்டிடும் அதிசயம்
கதை சொல்லும் புத்தகம்
கலைக்கூடம் சாளரம்
கண்களுக்கு நல்விருந்து
காட்சிகளின் ஓவியம் சாளரம் !

சாளரத்தைத் திறந்ததும்
ஒளி வந்து தொட்டுச் செல்ல
தென்றல் காற்றும் தழுவிட
தெம்மாங்குப் பாட்டிசையும் கேட்டிட
புத்துணர்வாகுமே உள்ளமும்
புதிய நம்பிக்கையும் பிறக்குமே !

பரந்து விரிந்து கிடக்கும் பூமியை
பரவசமாய் பார்த்து ரசிக்க
பசும் சோலைகளைக் கண்டு களித்திட
பட்சிகளின் இனிய கீதத்தைக் கேட்டு மகிழ
திறந்திடுமே சாளரமும் ஒளியோடு !

சாளரத்தின் ஒளியினிலே
மழைத்துளிகள் ஓவியமாக
நட்சத்திரக் கூட்டங்கள் கண்ணைச் சிமிட்டிட
கண்களும் குளிர சாளரமும் சாமரம் வீசிட
வாழ்வின் அழகான பரிசு சாளரமே !

Nada Mohan
Author: Nada Mohan