” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 69

“பழமை”

பாடசாலை வளாகத்தில்
பதம் பதமான நாவல் பழம்
பார்த்தாலே வாயுறும்
பார்த்து கொண்டு இருந்தே!!

இடை வேளை மணியடித்ததும்
இடைவெளி விடாது
இணை இணையாய் நின்று
நாவல் பழம் பொறுக்கி
மண்ணை வாயால் ஊதி
சுட்ட பழத்தை உண்டு மகிழ்ந்த பழமை நினைவு!!

அம்மா அம்மியில் அரைத்தெடுத்த தேங்காய் சம்பலோடு தோசை
சகோதரருடன் சேர்ந்துண்டு மகிந்த பெருமை
தேசம் கடந்தாலும் சுவை மாறாத தொன்மை!!

அப்பா கையால்
குழைத்து ஊட்டிய பழம்சோறு பழம்சோறு இன்னு இன்னும் நினைத்தால் நாவூறுதே நாவூறுதே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan