” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

அதனிலும் அரிது

இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது

சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது

உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு 

தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு 

கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது 

தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது

சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது 

முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது

வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி

காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி 

கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி

வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி

மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்

குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்

பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர் 

கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்

ஜெயம்

10-04-2022

Nada Mohan
Author: Nada Mohan