” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டால்

இங்கே மண்ணின் வாழ்க்கை ஒருதரம்
அங்கே எதுவும் இல்லை நிரந்தரம்
இந்தத் தத்துவத்தை உணர்ந்தாலே எவரும்
அந்தப் பக்குவமே ஆயுளுக்கும் அமைதிதரும்

ஆனபடியாலே இருக்கின்ற வாழ்வினை சரிபார்ப்போம்
வீணடிக்காது நாட்களை பிரிவுகளையகற்றி கைகோர்ப்போம்
ஆசையும் கோபமும் பொறாமையும் விட்டகலட்டுமே
மாசை அகற்றியே மனங்கள் ஒட்டிப்பழகட்டுமே

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான நிகழ்விது
இருந்தால் உறவுகளாய்
உற்பத்தியாகாதோ மகிழ்வது
புதுவாழ்க்கை ஒன்றுதனை
வாவென்றே அழைப்போமே
அதற்குமுன்னர் குறையுள்ள குணங்களைத்தான் களைவோமே 

ஜெயம்
23/05/2022

Nada Mohan
Author: Nada Mohan