” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

மாறிவிட்ட மானுடவுலகு

உலகம் இப்போ மாறிவிட்டது
கலகம் எங்கும் மீறிவிட்டது
பழக்கம் புதிதாய் ஊறிவிட்டது
விலகி மனிதம் ஓடிவிட்டது

ஏனிந்த மிருக வெறியாட்டம்
தானெனும் அகந்தையின் கூட்டம்
மானிட குணமின்றியே காட்டம்
பேனிடா நேயத்தை அழிவூட்டும்

உயிர்களைக் கொன்றா சந்தோசம்
பயத்தினால் சூழ்ந்தது மண்தேசம்
ஜனநாயகமென்றே சாயம் பூசும்
மனநோயாளிகளால் மனிதமும் கூசும்

முப்போதும் ஏக்கமா ஆழ்வது
எப்போது சமாதானம் சூழ்வது
இப்போதும் வரலாம் வீழ்வது
தப்பித்தான் எப்படி வாழ்வது

புதிதாய் பிறந்த பிஞ்சும்
சதிகாரர் செயலால் அஞ்சும்
தவிப்பொன்றா இறுதியில் மிஞ்சும்
புவியெப்போ வாழ்வினைக் கொஞ்சும்.

ஜெயம்
27-03-2022

Nada Mohan
Author: Nada Mohan