மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

” தடமது படைத்தெழும் தனித்துவம் “

ரஜனி அன்ரன்

“ தடமது படைத்தெழும் தனித்துவம் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.06.2024

முதல் ஒலியாய் ஒலித்து
முழுமதியாய் நிறைத்து
முத்தமிழை வளர்க்க
இலண்டன் நேரமாகி
இலண்டன் தமிழாகி
கண்டமெல்லாம் கடந்து
அண்டமெல்லாம் நிறைந்து
பாரெல்லாம் ஒளிரும் பாமுகமே !

தடமது படைத்திடும் தனித்துவமாய்
தமிழதை வளர்த்திடும் மகத்துவமாய்
தலைமுறை நோக்கிய பயணமதாய்
தடயத்தைப் பதித்து மகுடத்தைச் சூடும்
தரணியில் உன்பணி தனித்துவமே
தனித்துவத்திலும் ஒரு வித்தகமே !

இணையத்தின் துடுப்பில்
இளையவர் தொகுப்பில்
எழுத்தின் வேரில் படைப்பின் உயர்வில்
உருவாக்கப் படைப்பில் இமயம் நீ
உலக வலத்தில் உனக்கு மட்டுமே
உரித்தான வித்தகம் அதுவே தனித்துவம்
பாமுக ஒளியே பரிதியின் சுடரே
வாழிய பல்லாண்டு வளமோடு நீ !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading