” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தடமது பதித்தெழும் தனித்துவம்

சிவதர்சனி இராகவன்

தடமது பதித்தெழும்
தனித்துவம்…!

மூ ஒன்பது அகவையாம்
எம் முதல் ஒலி கலையகம்
மூத்த மொழி வளர்த்திடவே
தடம்பதித்த நிலை அகம்
மூலை முடுக்கெங்கும் தன்
புகழ் பரப்பித் தான் நிற்க
முந்தி வந்து தாள் பணிந்தோம்..!

படைப்பின் சக்தி விரிந்திடப்
படைப்போர் கூடமே இதுவாம்
இறுமாந்து தான் நிற்கிறோம்
எத்தனை வளர்ச்சி உந்தனுக்கு
கல்லையும் நீ கலையாக்கி
கனிந்தே எனையும் ஆளாக்கி
அடுத்த தலைமுறை வேரோட
எடுத்த அவதாரம் எத்தனையோ…!

பிரமன் படைப்பின் விந்தை
பிறக்கும் மனிதரே சிந்தை
கூர் தீட்டி நீயும் சீராக்கினாய்
குவலயத்தில் பேரை நீ தாங்கினாய்
முதல் ஒலி கலையகமாய்
சூரிய சந்திர உதயமுமாய்
பாமுகமாய்ப் பாரொளிர்ந்தாய்
பல முகத்தை அறிமுகமாக்கினாய்…!

பலன் கருதாப் பலசாலி நீ
பலம் கொழிக்கும் சிரசாகினாய்
உலகினிலே வலம் வந்தேகினாய்
உறவுகளாய் எமைத் தாங்கினாய்
உயிர் நாடி மொழி என்றாய்
உயிர்ப்புள்ள படைப்பாய் ஆக்கினாய்
உன்னால் நானும் ஆளாகினேன்
எழுத்தால் என்னை சீராக்கினேன்
ஏழ்மை நீங்கி வாழ்வேகினேன்…!
சிவதர்சனி இராகவன்
6/6/2024

Nada Mohan
Author: Nada Mohan