மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*******தீயில் எரியும் எம் தீவு******

இந்துமா சமுத்திரத்தில் இலங்கிடும் ஏந்திழையே
முந்தைப் பொருளணங்கே முழுமதிக் காவியமே
எந்தைத் தாயவளே எம்முயிர் தேவதையே
செந்தணலில் நீமூழ்கி சிதைகின்ற போதினிலே
பந்தம்கொள் எம்மனதும் பதைபதைத்து நிற்குதம்மா

ஆழ்கடல் முத்து என்றே அயலோர்
எடுத்துரைத்தார்
ஏழ்கடல் தாண்டி வந்தே உனதழகை
போற்றிச் வைத்தார்
வாழ்க நீ வாழ்க என்றே வாழ்த்துரைகள்
தந்து சென்றார்
வீழ்ந்து போவாயோ விதிவசத்தால் எம்தாயே

ஆழத்தெரியாத அரசரால் அல்லோலம்
பாழாகி போனாலோ அந்தோ
பரிதாபம்
வாழாமல் போவாயோ அம்மா நீ வருங்காலம்
தாழாத துன்பமம்மா தரணியில் இக்காலம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading