” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி இல— 89

தலைப்பு — அன்றிட்ட தீ

சாளரம் என்றும் அறிவின் நூலகம்
சொர்க்கமாய் திகழும் பெரும் நூலகம்
வளர்பிறையாய் நிறைகுடமாய் இருக்கும் நூலகம்
கல்விமான்களின் வரலாற்று பூந்தோட்டம் நூலகம்.

ஆசியாவின் நூலகம் யாழ்ப்பான நூலகம்
ஆசையாய் காத்த தமிழனின் நூலகம்
ஆவேசக்காரர்கள் அன்றிட்டனரே தீயை நூல்களுக்கு
ஆண்டுகள் நாற்பத்தொன்று கடந்தனவே கால்லோட்டத்தால்.

கற்றவர் கல்லாதவர் வேறுபாடில்லை நூலகத்தில்
கனிவான வார்த்தையால் கற்பது பலவாயிரம்
இணையவழி நூலகம் கைகளிலே இருக்குது – என்றாலும்
கண்ணுக்கு மிடுக்காய் யாழ்நூலகம் என்நினைவுகளில்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/06/2022

Nada Mohan
Author: Nada Mohan