” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி மனோகரி ஐஎகதீஸ்வரன்

பாமுகம்

தமிழ் வாழத் தமிழோடு புலம் பெயர் தமிழரும் வாழத்
திடமோடு
தளமெடுத்து ஒலிஒளி அலை வீசிடும் பாமுகமே
உந்தன் வரவின் நோக்கும் போக்கும் வளர்வும் பூப்பும் பெரிதே

பிணங்கா நெறியும்
நிமிர்வுக்கான நகர்வுக்கான பொறியே

நீ வீசிடும்
பல்சுவைப் பயனுறு நிகழ்வுகள்
நாளாந்தத் தரவு வீச்சுக்களே
தந்தனவே உந்தன் முகத்துக்கு வசீகரம்
அதனால் தள்ளிட முடியா அனுபவச் சேகரிப்பை
அள்ளினோம் நாமும்
அகப்பட்டு
உந்தன் ஆளுமைக்குள்
சிறைப்பட்டு உன் செந்தமிழ் பந்தளுள்
வெள்ளி விழாக் காணு பாமுகமே
அள்ளியள்ளித் தருகிறோம்
அமுதத் தமிழாலே வாழ்த்துக்களை
அடங்காது தமிழ் திறமோடு மேம்பாடுகளைக் கடத்தி
ஏறுமுகமே காட்ட

பாமுகப் பொலிவுக்காய் பயணிக்கும்
பாமுகத் தலைவர், தொகுப்பாளர், ஏனைய நிகழ்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Nada Mohan
Author: Nada Mohan