மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

“திரேஸ் மரியதாஸ்”-சட்டன்-லண்டன்

🌺எண்ணம்🌺
எண்ணமெனும் ஊற்றை
ஊற்றெடுக்கவைக்கும்
சிந்தையென்னும் தொழிற்சாலையைச்
சீராக இயக்கிச் சிக்கலில்லாமல்
செதுக்கிச் சிற்பமாக்குவோம்
செழிப்பாய் எழ

கடந்தகால எதிர்கால எண்ணங்களை
காத்திரமாய் காக்காது
போக்கி நல்வாழ்வு வாழ
பொக்கிஷமான வழி
தியானமே தியானமேயெனத்
தினமும் செய்வோம் சிறந்ந
மூச்சுப்பயிற்சியதை

போக்கவேண்டும் போலியானதான நினைவுகளை
இல்லையேல் உடலையும்
உணர்வுகளையைம்
காலியாக்கிவிடும் கடந்தகாலமது
கண்ணுக்குள்ளும்
நெஞ்சுக்குள்ளும் வந்து
கசப்பாக்கி கலைத்தேவிடும்
களிப்பான வாழ்வை

வாழ்வெனுங்கொடையை
சுவைத்து நறுமணம்பரப்பி
நற்சிந்தனைகளை
நாமுமெண்ணி நால்வகை
நிலங்களும் நுகரும்
நல் லெபனானின்
கேதுறு மரங்களாவோம்
———————————————-
பாமுக அதிபருக்கும் தொகுப்பாளினி வாணிமோகனுக்கும்
தொகுப்பாளர் ப.வை ஜெயபாலன் அவர்களுக்கும் அனைத்துக் கவிஞர்களுக்கும் அன்பான வணக்கமும் வாழ்த்துகளும் நன்றிகளும்
பாராட்டுகளும் என்கவியூடே எண்ணங்களாய்ப் பவனிவரட்டும்
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading