மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

வியாழன் கவி. 186.

மறக்க முடியுமா நம் தேசத்தை

தீவு நம் தீயில் பொசுங்கியதே. தீவு தீயால் எரிகிறது
தீயவர் செய்த நாமெல்லாம்
தீயானதே அடிவயிறும் எரிகிறது.

கார் மேகம் கலையமுன்
போர் மேகம் வந்து 13 ஆண்டும்
வந்ததே மறப்போமா நாம்.

துள்ளி குதித்து பள்ளி சென்றதை மறப்பதா?
நிலாச் சோறு உண்டதை மறப்பதா?

அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்கியதை மறப்பதா
மாமரத்தில் ஊஞ்சலில்
ஆடியதும் ,
கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த நாம் இப்போ தனித்தனியே இருப்பதை மறப்பதா?

செங்குருதி தோய்ந்த மண்ணில்
உறவுகளைத் தொலைத்து பரிதவிக்கும் வயோதிபதாய் தந்தை கண்களில் சென்னிற நீர் வடிகிறது தெரிகிறதா புரிகிறதா?

இறுதி நாளில் பிள்ளைகள் வந்து கொள்ளி போடுவார்களா
வாசல் விழிபாத்து மறைந்தவர்கள் எத்தனை.
பேர் ஊரில்.
வீதியும் ,வீட்டு முற்றம் பல பல்கலை கூறும் இப்போ.

எனினும் வேண்டாம் இன் அழிப்பு
இனைந்தே நாம் நியாயத்தை வென்று சாதனை செய்வோம்
தாராசின் மூடிய கறுப்பு போர்வையை விலக்கிடுவோம்.

அதிபர் வாணி நகுலா,. சிவதஸ்சினி வாழ்த்துக்கள்
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading