மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நகுலா சிவநாதன்

நெஞ்சத் தமிழே!

அஞ்சா நெஞ்சம் படைத்து நாமும்
அறிவில் பலமாய் ஓங்கிடுவோம்
கொஞ்சும் தமிழும் கோடி அழகும்
கொள்ளை இன்பம் தருமன்றோ!
நெஞ்சம் இனிக்க நிறைந்த தமிழை
நேசம் ஆக்கிப் படித்திடுவோம்
பஞ்சம் வந்தால் பலதும் மறக்கும்
படித்த தமிழை மறந்திடாதே!

புலமைத் தமிழை புலத்தில் வளர்த்து
பெருமை பெற்றே வாழ்ந்திடுக!
நிலமை புரிந்து நின்றே காத்து
நிதமும் பாக்கள் புனைந்திடுக!
கலகம் அகற்றி கன்னித் தமிழை
கற்று கொடுக்க முனைந்திடுக
நிலங்கள் சென்று தாயை வணங்கி
நிதமும் தமிழைப் பாடிடுக!

நகுலா சிவநாதன்1675

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading