ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!

மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப் பூவினம்
எங்கும் உயிர்க்கும்
வாசனை வீசியே
வரவேற்று மகிழும்
மண்ணின் மீதோ
மலர்வுகள் பலவாகும்
மஞ்சளாய் மாயத்துகள்
சொரிந்தே கிடக்கும்
ஒளியின் கதிர்கள்
விரைந்தே நிரப்பும்
ஓயாது தென்றலும்
நடம் புரிந்து நிற்கும்
உடலில் வெம்மை
உணர்வை ஆட்டிவைக்க
புலரும் பொழுதுகள்
வசந்தத்தின் மடி தவழும்..
சிவதர்சனி இரா

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading