திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!

மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப் பூவினம்
எங்கும் உயிர்க்கும்
வாசனை வீசியே
வரவேற்று மகிழும்
மண்ணின் மீதோ
மலர்வுகள் பலவாகும்
மஞ்சளாய் மாயத்துகள்
சொரிந்தே கிடக்கும்
ஒளியின் கதிர்கள்
விரைந்தே நிரப்பும்
ஓயாது தென்றலும்
நடம் புரிந்து நிற்கும்
உடலில் வெம்மை
உணர்வை ஆட்டிவைக்க
புலரும் பொழுதுகள்
வசந்தத்தின் மடி தவழும்..
சிவதர்சனி இரா

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading