பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்திம் சந்திப்பு
வாரம்: 172
26/04/2022 செவ்வாய்

“சுந்தரி நீ எனதானாய்!”
—————————-
உயிருடன் மெய்யானாய்!
உணர்வுடன் ஒன்றானாய்!
தருவதன் தழையானாய்!
தங்கத்தில் சிலையானாய்!

அமிழ்திலும் இனிதானாய்!
ஆனந்தச் சுருதியானாய்!
பொழுததன் விடியலானாய்!
பொன்தரும் மின்னலானாய்!

குயிலதன் குரலுமானாய்!
குலவிடும் மானுமானாய்!
அழகினில் மயிலுமானாய்!
அன்புக்கு நீயே ஆனாய்!

எழில்தரும் நதியுமானாய்!
ஏறுபோல் மலையுமானாய்!
குளிர்தரும் வாடையானாய்!
கொட்டிடும் பனியுமானாய்!

இதந்தரு மொழியுமானாய்!
இரவென மௌனமானாய்!
சுகம்தரும் தென்றலானாய்!
சுந்தரத் தமிழ் நீ எனதானாய்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading