” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 173
03/05/2022 செவ்வாய்

தொழிலாளி
———————
உலகம் இயங்குது உன்னாலே
உள்ளம் மகிழுது தன்னாலே
அகிலம் முழுதும் பின்னாலே
அணியாய் திரளுது இந்நாளே!

உணவு தர உழவன் வேணும்
உலகு தழைக்க உழைப்பு வேணும்
துரவு எங்கும் துளிர்த்திட வேணும்
தூய்மை எங்கும் காத்திட வேணும்!

இரும்படிக்க ஒருவன் வேணும்
இருப்பதைக் காக்க பூட்டு வேணும்
கரும்பு வெட்டக் கத்தி வேணும்
களனி அமைக்க கருவி வேணும்!

கழுத்து மறைக்க நகைகள் வேணும்
கைகள் கனக்கக் காப்பும் வேணும்
அழுக்குத்துணி துவைக்க வேணும்
அலங்காரம் செய்ய ஆளும் வேணும்!

எல்லாத் தொழிலும் தொழிலெனக் கூறு
இதற்குள் வேண்டுமா ஏற்றத் தாழ்வு
மெல்லச் சாகட்டும் மேல்கீழ் மனப்பாங்கு
மேன்மை தந்திடுமே தொழில் பண்பாடு!

உலகம் கொண்டாடும் ஓர் நாளே!
உன் உழைப்புக்கு ஓர் நன்னாளே!
திலகம் வைத்திட்ட ஒரு பெருநாளே
தீராவலி தீர்த்திட்ட “மே” திருநாளே!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan