கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீயில் எரியும் எம் தீவு
திரும்பிப் பார்க்க வைக்கின்றது அதன் நிகழ்வு
சொல்லைக் காவ மறுக்கிறது நாவு
சொல்லாது விடினும் தீராது சோர்வு
அன்றும் இன்றும் அரங்கேறும் நிகழ்வு
ஆனாலும் ஆணிவேரோ வேறு வேறு
எல்லைக் கோட்டால் எரிந்தது எம்பாகம் அன்று
தொல்லை அதிகரிப்பால் எரிகிறது அவர் பாகம் இன்று
அன்று இனவெறித் தீயால் எரிந்தது எம்தீவு
இன்றோ பசிவெறித் தீயால் எரிகின்றது எம்தீவு
தீ வைத்தவருக்கே தீயின்று
தீண்டியது முன்வினையே
அவரினத்தைக் கொண்டே அறிவித்ததும்
இறைவிருப்பே
எரிந்தே சாம்பலாகட்டும்
இனவாதமும் இத்தீயில்
எழுந்தே சிரிக்கட்டும் எம் ஈழமாதாவும் தீச்சுவடுகள் கழன்று

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading