ரஜனி அன்ரன்

“ அன்றிட்ட தீ “….நிழலாடும் நினைவுகள்…கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.06.2022

குன்றின் தீபத்தை குடாநாட்டின் கலசத்தை
கலாச்சாரத்தின் சின்னத்தை கலங்கரை விளக்கை
அறிவின் பொக்கிஷத்தை அனலுக்குள் பொசுக்கி
அழித்தாரே நீசர்கள் ஆண்டுகள் நாற்பதும் கடந்ததே
அன்றிட்ட தீ இன்று வரை நிழலாடும் நினைவுகளே !

நூலக எரிப்பு நுண்மையின் அழிப்பு
தேடற்கரிய தேட்டங்கள் இழப்பு
அறிவின் அற்புதம் உறைந்த இடம்
ஆயிரமாயிரம் மேதைகள் உருவான தளம்
ஆசான்கள் காட்டிய வழித்தடம்
அறிவுப் பசி தீர்த்த அமுதகூடம்
அன்றிட்ட தீயில் பொசுங்கிய போதும் – இன்று
அதேயிடத்தில் பூத்துக் குலுங்குது புதுப்பொலிவோடு !

காலத்தின் விரைவில் கடுகதி உலகில்
கணணி யுகத்தில் தொழில்நுட்ப வேகத்தில்
அறிவின் வளர்ச்சியோ அசுர வேகத்தில்
கையுக்குள்ளே உலகம், விரலுக்குள்ளே வித்தகம்
நூலகத்தை நாட வேண்டிய தேவையுமில்லை
தட்டி விட்டால் வருகிறது தகவல்கள் – இப்போ
நூலகங்கள் கணணிக்குள் கைத்தொலைபேசிக்குள் அடக்கம்
ஆனாலும் அன்றிட்ட தீ இன்றுவரை நிழலாடும் நினைவுகளே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading