மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஞ்சிதா கலையரசன்

“பட்டினி”
பட்டினியில் வாடி
படை படையாய் திரண்டோடி
கிட்ட விழுந்து அதிரும்
குபீ் ர் குண்டால் உடல் சிதறி
செத்தவரை புதைக்க
நிறுகுழிக்குள் மூடி விட்டு
வெட்ட வெளி வெள்ளம்
சகதி கும் இருட்டு
பட்ட பாடு சொல்ல
பாட்டு வரி போதாதே.
பாலுக்கு அழும் சிசுவும்
பட்டினியில்அழுவோரும்
கால் போன போக்கில்
கடல் அலை போல் சனக்கூட்டம்
ஆள் பிடிக்க வருபவர்க்கு
அஞ்சி இளம் பொடி பெண்ணை
நாள் எல்லாம் ஒளித்து வைக்க
நுடுங்கி பயந்திருந்து
மலம் கழிக்க பகல் பொழுது
மறையும்வரை காத்திருந்த
இன அழிப்பு போரின்
இறுதி துயர் கட்டம்
முள்ளி வாய்க்காலில
முடங்கி நின்ற காலத்தை
உள்ளம் மறவாது
உலுக்கும் நினைவலைகள்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading