” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.04.22
ஆக்கம்-224
வேண்டும் வலிமை
குட்டக் குட்ட குனிந்து கூனிக் குறுகியது
போதுமென்று நிமிர்ந்து நிற்கிறது இன்று
தன் இனத்துக்காகப் போராடியவனைச்
சிதைத்து இரத்தம் குடித்த வரலாறு
சீற்றமுடன் சீறுகிறது

உணர்வு கொடுத்த தமிழ் பேசியது குற்றமென
உருக்குலைத்து ஊமையாயிருந்த உண்மை
விதை முளைத்து விருட்சமாய் வளர்கிறது

உதைத்தவன் சாவி எம் கையில் ஊர் உலகம்
கண் திறக்கையில் ஊக்க வலிமையோடு
இனியாவது எம்மண் காத்திட வேண்டும்

நித்தம் சீரழியும் பித்தம் பிடித்த அரசில்
யுத்தமின்றி புத்தம் புதிய பூரண விடுதலை
யுத்தியான புத்தியுடன் கண்டிட வலிமை
வேண்டும்

Nada Mohan
Author: Nada Mohan